Nov 13, 2007

நிறைவு



அஃறினைப் பொருள்களை வைத்து கதை புனைவதில் வல்லவர் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன்.
இவருடைய இந்த குட்டிக் கதைகளின் முடிவில் சொல்லும் இருவரி தத்துவங்கள் அனைவருக்குமான பாடங்கள்.


நகைக் கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.

எனக்கு ஏன் மதிப்பில்லை.
நானும் ஒரு கல் தானே என்று ஓலமிட்டது.
தெருவோரத்தில் கிடந்த கடப்பரை கூறியது....

ஏ குறுணி. காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்ட பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய்.ஆனால், இரத்தினக்கல் அப்படியா. நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை வெளியில் தலைகாட்டியதே இல்லை.எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டிருந்தது.

அப்படியென்றால்...- என்று இழுத்தது குறுணிக்கல்.

கடப்பாரை சொன்னது.

நிறைவாகும் வரை
மறைவாக இரு.


- காசி ஆனந்தன் கதைகள் நூலிலிருந்து.

4 comments:

  1. ViswaNathan.D
    Chennai, Tamil Nadu, India.

    Dear Tamil Kutty,

    Very Nice Story.Waiting For More good stories from you.

    Thanks & Regards,

    Viswa Nathan.D

    ReplyDelete
  2. Sir,

    Where can i buy the books of this author?

    Can you suggest.

    isit available in chennai / madurai?

    Please let me know.

    Thanks for introducing a new writer to me.

    ReplyDelete
  3. Tamil Kutty potta Postingla idhu onnum mattum than good.

    mathadhu ellam very very bad.

    Try to improve your style of writing.

    ReplyDelete