Dec 13, 2008

காதல் என்பது என்ன? கவிப்பேரரசு வைரமுத்துவின் விளக்கம்




கவிப்பேரரசு வைரமுத்துவின் சிகரங்களை நோக்கி கதையில்
நாயகன் திருஞானத்திற்கும் நாயகி ஓவியாவிற்கும்
இடையே நடைபெறும் காதலைப் பற்றிய கவித்துவமான உரையாடல்.
இது காலம் கடந்தும் நிற்கும்! காதலைப் பற்றிய அற்புத தத்துவம்!

அவன் அவசரமாய் ரோஜாவை நீட்டி ஐ லவ் யூ என்றான்.
அவளுக்கு அதிலொன்றும் அதிர்ச்சியில்லை.

நதி வந்து கலப்பதால் கடல் ஒன்றும் கைதட்டிக் கொள்வதில்லை.
கண்டனம் தெரிவிப்பதுமில்லை. நீட்டிய ரோஜாவை நிதானமாய்
வாங்கிக் கொண்டு 'நன்றி' என்றாள்.

அதிர்ச்சி அவனுக்குத்தான்.

அவள் முகத்தில் ஒரு வெட்க வெயில் அடிக்காதது கண்டு, அவன்
இருண்டு போனான்.

நீ.... நீ... நீயும்தானே என்று தப்புத் தப்பாய்த் தந்தியடித்தான்.

அவள் சிரித்தாள்... நீளமாய்ச் சிரித்தாள்.

அந்த சப்த அலைகள் அவன்மீது சாட்டை சொடுக்கின.

ஏன்? ஏன்? சிரிக்கிறாய். நான் சொல்வது உனக்குப் புதிதாய் இருக்கிறதா?

இல்லை. புதியதில்லை. அதுதான் சிரிக்கிறேன்.

புரியவில்லை

என்னைப் பார்த்து ஐ லவ் யூ சொன்ன ஆட்களின் வரிசையில் நீங்கள்
கடைசியில் நிற்கிறீர்கள். ஐ லவ் யூ என்ற வார்த்தை ஒன்று தான்.
வாய்களே வேறு வேறு.

ஏன்? காதல் என்ற தத்துவத்தில் உனக்கு நம்பிக்கை இல்லையா?

தகராறு தத்துவத்தோடு அல்ல, தலைமுறையோடு!

இந்தத் தலைமுறைக்குக் காதலிக்கத் தெரியவில்லை.
காரணம் காதலென்றால் என்னவென்றே தெரியவில்லை.
சிகைக்காய் என்பது சீயக்காய் என்று திரிந்தத மாதிரி, காதல்
என்ற புனிதமான பதமும் பொருள் புரண்டுவிட்டது.

'காதல் என்பதன் புரளாத பொருள் யாது?'

"காதலை வெறும் தத்துவமாகப் பார்க்கிற கூட்டம், அதை
உள்ளம் சார்ந்ததென்றே உணர்த்துகிறது. காதலை ஒரு தாகமாகப்
பார்க்கிற கூட்டம், அதை உடல் சார்ந்ததாகவே உணர்கிறது.
ஆனால், உண்மையில் காதல் என்பது பாச உணர்ச்சியும், பாலுணர்ச்சியும் பின்னிப்பின்னி ஜடை போட்டுக் கொள்கிற சம்பவம். பாச உணர்ச்சி மட்டுடே காதலென்றால்
ஒரு பிராணி போதும். பாலுணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு விலைமகள்
போதும். ஆனால், இந்த இரண்டும் எந்தப் பளளியில் சந்தித்துக் கொள்கின்றனவோ,
அந்தப் புள்ளிதான் காதல்.இப்போது சொல்லுங்கள் நீங்கள் எந்தப் புள்ளியில் நிற்கிறீர்கள்?"

Dec 12, 2008

சந்திரமுகி சாதனையை முறியடிக்கப் போகும் படம்!

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து அதிக நாட்கள்
ஓடிய படம் என்ற சாதனையை சந்திரமுகி படைத்தது.
ஆனால் அதையெல்லாம் அதையெல்லாம்
தன்னுடைய ஹேர் ஸ்டைல், கூலிங்கிளாஸ், முறுக்கிய மீசை
மூலம் முறியடிக்கப் போகிறார் வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்.
சமீபத்தில் திரைக்கு வந்த எந்த படமும் 100 நாட்களுக்கு மேல்
ஓடியதாகத் தெரியவில்லை. அதை நாயகன் படம்
முறியடித்து விட்டது. இந்தப் படம் இன்று 125வது நாள்.
கூடிய விரைவில் சந்திரமுகி சாதனையை
முறியடித்து கின்னஸில் இடம் பெறும் என்று நம்புவோம்.

Dec 10, 2008

அடியே கொல்லுதே! அழகோ அள்ளுதே!




வாரணம் ஆயிரம் படத்தில் உள்ள அனைத்து
பாடல்களும் கேட்பதற்கும், பார்ப்பதற்கும்
இனிமை.

இந்தப் படத்தைப் பார்த்த போது
முன்தினம் பார்த்தேனே, நெஞ்சுக்குள் பெய்திடுமா மழை
ஆகிய இரண்டு பாடலும்தான் நினைவில் இருந்தது. தொலைக்காட்சியிலும்
வானொலியிலும் தொடர்ந்து இந்தப் படத்திலுள்ள அனைத்து பாடல்களையும்
பார்த்து/கேட்ட போது தான் இதை விட அட்டகாசமான
மற்றொரு பாடலான அடியே கொல்லுதே பாடல் மற்ற
பாடல்களை விடவும் மிகவும் ஈர்த்தது.

காரணம் இந்தப்பாடலில் உள்ள இசை, பாடல் எடுக்கப்பட்ட இடங்கள்,
நடனம், பாடியவர், தாமரையின் உள்ளார்ந்த அர்த்தமுள்ள காதல் வரிகள் இந்தப்
பாடலை மீணடும் மீணடும் கேட்கத் தூண்டுகிறது.

இந்தப் பாடலின் சூழலைப் பாருங்கள்....
காதலன் காதலியை தேடி அமெரிக்காவிற்கு செல்கிறான். அவளை சந்திக்கிறான்.
அவள் அழகை புகழ்ந்து பாடுகிறான்.

--------------------------------
அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே

உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே
-------------------------------------------
காதலியும் அவன் காதலை எற்றுக் கொள்கிறாள்.
அவள மனதில் காதலனைப் பற்றிய தன் உணர்வை இப்படி
அழகாக வெளிப்படுத்துகிறாள்.


உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே
------------------------------------

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ
-----------------------------------------------
தன்னுடைய காதலுக்கு காற்று, மின்சாரம், மழை, மண் ஆகியவற்றை
துணைக்கு அழைத்து பாடுகிறாள் காதலி.

வாடைக்காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே

உந்தன் கண்களில் ஏனோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே

மழைக்காலத்தில் சரியும்
மண் தரைப் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே

.......................................................................
அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே

ஒருசொல் ஒருசொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில்தோகை போலவே என் மீது ஊறுதே

எல்லா வானமும் மீண்டும் சில நேரம்
மாத்திரம் செந்துாரம் ஆகுதே

எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்

உனைத் தோற்று நீ எனை வென்றாயே.

----------------------------------------

தன்னுடைய காதலுக்கு காற்று, மின்சாரம், மழை, மண் ஆகியவற்றை
துணைக்கு அழைத்து பாடுகிறாள் காதலி.

இந்தப் பாடலை பாடிய பெண். ஸ்ருதி கமல.
மிக அற்புதமாக பாடியிருக்கிறார். சமீரா ரெட்டிக்கு இவர் குரல் மிகச் சரியாக பொருந்தியிருக்கிறது.

இந்தப்பாடலில் தாமரை சாதாரணமாக ஆனால்
அசாதாரணமாக எழுதியிருக்கிறார்.

இசையோடும், பாடகரோடும், நடனத்தோடும்
கலந்து ஒரு காக்டெயில் விருந்தே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

தினமும் இப்பாடலை குறைந்தது 20 முறையாவது கேட்கிறேன்.தின்ன தின்ன
திகட்டாத இனிப்பைப் போல கேட்க கேட்க தேனாக இனி்க்கிறது இந்தப் பாடலின்
வரிகளும், பாடியவரின் குரலும்.

Dec 1, 2008

சென்னை துரைசாமி சப்வே இன்று மூடப்பட்டது






கடந்த நான்கு நாட்களாக சென்னையை தாக்கிய நிஷாவின் சீற்றத்திலிருந்து இன்னும் சென்னை மீளவில்லை. இன்று காலை பீக் ஹவர்ஸில் சென்னையின் பிஸியான
பகுதியான துரைசாமி சாலை மூடப்பட்டது. மழை நீரும், சாக்கடை நீரும் கலந்து இடுப்பளவுக்கு இருந்தததினால் அவ்வழி அடைக்கப்பட்டது. தினமும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.

கலைஞர் 24மணி நேர செய்திகள் தொடக்கம்

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் கலைஞர் 24மணி நேர செய்திகள் சேனல் நவம்பர் 30 அன்று தொடங்கப்பட்டது.







-நன்றி
தினமலர்

Nov 21, 2008

கலைஞரை வஞ்சித்த புகழ் மற்றும் அன்பு !

இன்றைய முரசொலியில் கலைஞர் உடன்பிறப்புக்கு எழுதியுள்ள தலையங்கம்!








Nov 13, 2008

சன்னை நெருங்கும் கலைஞர் ! -வெளிவரும் புதிய சேனல்கள், உருவாகும் கலைஞர் நெட்வொர்க்

கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு தான் ஆகிறது. அதற்குள் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம்பிடித்து விட்டது. புதுப்புது நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்கள், வித்யாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,குடும்பத் தலைவிகளை கவரும் நாடக்ங்கள் என சன்டிவிக்கு சவால் விடும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். சன் டிவிக்கு இப்போது தான் உண்மையான நெருக்கடி ஆரம்பித்துள்ளது. தங்களை நிருபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

முன்பெல்லாம் சன்டிவியில் Scrolling ஐ ஏதேனும் மிக முக்கிய நிகழ்வுகள், தேர்தல் அறிவிப்புகள் ஆகியவற்றின் போதுதான் பார்க்க முடியும். ஆனால் தற்போது அடிக்கடி பார்க்க முடிகிறது. ஏதோ முக்கியமான ப்ளாஷ் நியூஸ் என்று ஆவலோடு பார்த்தால்
5 வருடத்திற்கு முன்பு வந்த ஹாலிவுட் படங்களை தூசு தட்டி, தமிழ்படுத்தி காணத்தவறாதீர்கள் ஹாலிவுட் சூப்பர்ஹிட் திரைப்படம் என்று Scroll செய்கிறார்கள். இது தவிர சில நிகழ்ச்சிகள் இந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்பதை அறிவிக்கவும் Scroll ஓடுகிறது. ஏன் இந்த நிலை?.

இது தவிர கடந்த வாரம் 8 மணி நாடகத்தை நிறுத்தி விட்டு ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு ஒளிபரப்பினார்கள். ஏன் இந்த மாற்றம்? எல்லாம் டீஆர்பி ரேட்டிங் செய்த மாயம்.


வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் சன்டிவியில் 2 திரைப்படங்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இந்த வருடம் தீபாவளியன்று 3 திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள்.சன்டிவியில் நிகழ்ச்சிக்கு பஞ்சமா அல்லது கிரியேடிவ் ஆட்கள் பற்றாக்குறையா என்று தெரியவில்லை.

இது போதாதென தீபாவளியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் சன்டிவியின் டீஆர்பி ரேட்டிங் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கலைஞர் டிவியின் டீஆர்பி ரேட்டிங் சன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

சன்னை டென்ஷனாக்க கலைஞர் டிவிலிருந்து அடுத்து பலப்பல புதிய சேனல்கள் வரிசையில் வர காத்துக் கொண்டிருக்கின்றது. சிரிப்பொலி, கலைஞர் 24 மணி நேர செய்திகள் அது போக 24 மணி நேர திரைப்பட சேனல் என்று தொடர்ந்து பல சேனல்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக இருக்கிறது. இது தவிர தெலுங்கு, மலையாள சேனல்கள் வேறாம்.
மேலும் முன்னணி தினசரி பத்திரிகை மற்றும் FM ஒன்றை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் கலைஞர் தரப்பினர்.


இது போக தற்போது முரசு என்ற பெயரில் கேபிள் மூலம் திரைப்பட பாடல்கள் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுவும் கலைஞர் டிவியின்
ஓர் கேபிள் சேனல். இதில் மிக அருமையான பழைய திரைப்பட பாடல்கள் மற்றும் 1980களில் வெளிவந்த சூப்பர்ஹிட் பாடல்கள் இளையராஜா ஹிட்ஸ், எஸ்பிபி ஹிட்ஸ்
என தேர்ந்தெடுத்த பாடல்களாக ஒளிபரப்புகிறார்கள்.


ஆக மக்கள் மனதில் சன்டிவிக்கு அடுத்த இடத்தில் கலைஞர் டிவி இடம் பிடித்து விட்டது. முதலிடம் பிடிக்க சில காலம் மட்டுமே ஆகலாம். எதிலுமே நம்பர் 1 ஆக விரும்பும் சன் குழுமம் விழித்துக் கொண்டால் சரி. இனி மேலும் திரைப்படங்களை வைத்து மட்டும் நேரத்தையும், காலத்தையும் ஓட்டாமல் அறிவு சார்ந்த, பொழுது போக்கான புதிய நிகழ்ச்சிகளை சன் டிவி ஒளிபரப்பினால் மட்டுமே தன்னுடைய
இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். செய்வார்களா?

Oct 24, 2008

வைகோ கைது ! வீடியோ பதிவு

Oct 22, 2008

சென்னையில் பலத்த மழை

கடந்த ஒரு வாரமாக சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இன்று (22.10.08) காலை தி.நகரில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு.

Oct 7, 2008

சூப்பர் ஸ்டார் vs அல்டிமேட் ஸ்டார் - ஜெயிக்கப்போவது யாரு?




ரஜினி நடித்த கடைசி சூப்பர் ஹிட் படம் எது
தெரியுமா.? சந்திரமுகி. (ரஜினிக்கே இந்த விஷயம் தெரியாது)
இப்படிக்கூறித்தான் சன்டிவி இந்தப்படத்திற்கு விளம்பரத்தை சேர்க்கிறார்கள்.
தீபாவளியன்று சன்டிவியில் சந்திரமுகி திரைப்படம்
ஒளிபரப்பாகவிருக்கிறது. சன்டிவியிடம் இருக்கும் ரஜினியின்
கடைசி சூப்பர் ஹிட் படம் சந்திரமுகி மட்டுமே.
இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்ய 10sec க்கு ரு.45,000.
விலை நிர்ணயித்துள்ளது சன்டிவி. தென்னிந்திய தொலைக்காட்சி
வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு இந்த அளவு தொகைக்கு விற்கப்படும் படம்
சந்திரமுகிக்குத்தான்.

இந்தப் படத்திற்கு சரியான போட்டியாக தல யின் சூப்பர்ஹிட்
படமான பில்லா (ஒரு வகையில் இதுவும் ரஜினி படம்தான்)
கலைஞர் டிவியில் தீபாவளியன்று ஒளிபரப்பாகவுள்ளது.
இதில் விளம்பரம் செய்ய 10sec க்கு ரு.25,000.
பில்லா படம் திரைக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது.
ஆனால் சந்திரமுகி படம் வந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.
இருந்தாலும் சன்டிவியிடம் இருக்கும் ஒரே கடைசி ரஜினி படமான
சந்திரமுகி எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கும் என தெரியவில்லை.

இது தவிர சமீப நாட்களில் சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் இடையேயான போட்டி
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியை
யாரும் பார்க்கக் கூடாதென்று அந்த நேரத்தில் ஹாலிவுட் படங்களை
ஒளிபரப்புவது, கலைஞர் டிவியில் லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது
ரஜினியின் படத்தை கேடிவியில் ஒளிபரப்புவது என்று சன்டிவி போட்டிபோடுகிறது.


கலைஞர் டிவியில் கடந்த வாரம் சனிக்கிழமையன்று ராஜாஜி ராஜா திரைப்படம் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு செய்தார்கள். அதே நாள் காலையில் கேடிவியில் அந்தப்படத்தை ஒளிபரப்பு செய்துவிட்டார்கள்.வேறு வழியில்லாமல் கலைஞரில் குரு விஷ்யன் ஒளிபரப்பானது. இது போக தங்களிடமிருந்து கைவிட்டுப் போன படங்களை சன்டிவி டாப் டன்னில் கொண்டு வராது. அப்படியே கொண்டு வந்தாலும் அதில் உள்ள குறைகள் மட்டுமே மிகைப்படுத்தப்படும்.

உதாரணமாக குசேலன் படத்தை கலைஞர் டிவி வாங்கி விட்டது என்ற ஒரே காரணத்திற்காக தினகரன் நாளிதழ் அந்தப் படத்தை கிழிகிழியென்று கிழித்து விட்டது. தொடர்ந்து ஒரு வாரம் குசேலன் படத்தை மட்டுமே தலைப்புச் செய்தியாக தினகரனில் இடம் பெற்றது.

ஆனால் விஷால் நடித்த சத்யம் படம் சன்டிவியில் டாப் 10ல் பல வாரங்களாக முதலிடத்தில் இருந்தது. விஷால் நடித்த படங்களிலேயே அதிக அளவு செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். ஆனால் விஷால் நடித்த படங்களிலேயே வேகமாக பெட்டிக்குள் சுருண்ட படம் சத்யம். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படு பிளாப். ஆனால் இந்தப் படத்தை ஒவ்வொரு வாரமும் நெ.1 என்று அறிவிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது. தாங்கள் தான் புத்திசாலி மக்கள் எல்லாம் முட்டாள் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சன்டிவி.

இத்தனை ஆண்டு காலம் மீடியா துறையில் இருக்கும் சன்டிவி இம்மாதிரியான செயல்களின் மூலம் தன்னைத்தானே சிறுமைபடுத்திக் கொண்டிருக்கிறது.
சந்திரமுகியா? பில்லாவா ? இதில் எந்தப் படத்திற்கு விளம்பரங்களை கொடுக்கலாம் என்று விளம்பர நிறுவனங்கள் தற்போது குழப்பத்தில் உள்ளன.

Sep 23, 2008

எந்திரன் பட ஸ்டில்ஸ்- என்ன கொடுமை ஷங்கர் இது

ஷங்கரின் ஒவ்வொரு படத்திற்கும் தவறாமல் பத்திரிகையில் இந்தச் செய்தியை படிக்கலாம்.
இந்தப் படப்பிடிப்பிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐடி கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. இப்படியாக படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறும். சிவாஜி படத்திற்கும் இப்படித்தான் பெரிய அளவில் எதிர்பார்ப்பை எகிற வைத்தார்கள். கடைசியில் ஒரு கூடை சன்லைட் பாடல் காட்சியின் அனைத்து போட்டோவையும் ஷங்கரே இணையதளத்தில் தான் பார்த்து தெரிந்து கொண்டாராம்.

எந்திரன் படத்திற்கு இதைவிட பலத்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. கம்ப்யூட்டர் மூலம் வரையப்பட்ட ஒரே ஒரு ரஜினியின் போட்டோ மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் அதையும் மீறி சில ஸ்டில்கள் வெளிவந்துள்ளன. பெரு நாட்டில் நடைபெற்ற பாடல் ஷூட்டிங்கின் ஸ்டில்கள் தான் கீழே இருப்பது. கூடிய விரைவில் பாடல்களையும் எதிர்பார்ப்போம்.
என்ன கொடுமை ஷங்கர் இது.






Aug 26, 2008

அடையார் வாசிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

அடையார் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் புதியதாக http://www.adyarplus.com/ என்ற வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் ஏராளமான தகவல்கள், உதவிகள் என பலதரப்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

சிறப்பம்சமாக, இந்த பகுதிகளில் வாழும் மக்களில் யாருக்காவது நீங்கள் வாழ்த்துகள் அனுப்ப விரும்பினால், அதையும் கூட இந்த வலைத்தளத்தில் பதிவு செய்வதன் மூலம் எளிதாக இருந்த இடத்திலிருந்தே அனுப்ப முடியும்.

இலவச வரிவிளம்பரங்கள், குறிப்பிட்ட பொருட்கள் விற்கும் கடைகளின் பட்டியல்கள் என்று அன்றாட வாழ்வுக்கு மிகவும் தேவையான முக்கிய தகவல்களை எளிதில் இங்கு பெற முடிகிறது. இந்த பகுதிகளை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றின் முகவரிகளும் இங்கு கிடைக்கிறது.

இவற்றைத் தவிர, என்ஜிஓ எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு, ஆன்லைனில் ஒரு இலவச வலைப்பக்கம் வழங்கவும் இந்த வலைத்தளம் தீர்மானித்துள்ளது. பல வகையில் மிகவும் அவசியமான தகவல்களை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்கள் அறியவும் இந்த வலைத்தளம் மிகவும் பயன்படக்கூடியது..

மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

May 20, 2008

டான்ஸ் ஆடிய ஜெ!


கோடை விடுமுறையை கொண்டாட கொடநாடு சென்றிருக்கும் ஜெயலலிதா அங்கு படுகர் இன மக்களுடன் மகிழ்ச்சியுடன் டான்ஸ் ஆடுகிறார்.

Feb 12, 2008

காதல் என்பது என்ன? விளக்குகிறார் கவிப்பேரரசு வைரமுத்து



காதல் என்பது என்ன? கவிதை எழுதுவது எப்படி? காதலித்தால் கவிதை வருமா?
இப்படி பலப்பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

Feb 8, 2008

கலைஞரை எதிர்க்கும் கலாநிதிமாறன்! - இடம் மாறும் சன்.டிவி



மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது.
ஆனால் இன்றுவரை சன் டிவிக்கும் கலைஞருக்கும் ஆரம்பமான பிரச்னை தீரவில்லை.

கடந்த பிப்ரவரி 2 & 3, 2008 அன்று சன்மியூசிக் சேனலில் காலையிலிருந்து மாலை வரை ஒரு scrolling ஓடிக் கொண்டிருந்தது. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் காம்பியரிங் வேலைக்கு தேவை என்றும், உடனே உங்கள் பயோடேட்டாவை கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது.

பெரும்பாலும் சன்மியூசிக் சேனலில் காம்பியரிங் பணிக்கு அங்கு பணிபுரிவர்களின் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மேலிடத்திற்கு நெருக்கமானவர்களின் நண்பர்கள் என்று நட்பு வட்டத்திற்குட்பட்டவர்களுக்குத்தான் வேலை கிடைக்கும். இப்போது என்ன புதிதாக அறிவிப்பு வெளியிடுகிறார்களே என்ற வியப்பு எழுந்தது. மேலும் சன்டிவியில் எந்தவொரு வேலைக்கும் ஆள் எடுக்க வேண்டுமென்றால் பெரும்பாலும் ஞாயிறு, இந்து நாளிதழில் தான் விளம்பரம் கொடுப்பார்கள்.

அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல். பிப்ரவரி 3 அன்று கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் வீட்டு இல்லத்திருமணம் அறிவாலயத்தின் பின்புறம் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலைஞர் வந்து கலந்து கொள்வார் என்று எல்லோருக்கும் தெரியும்.

கலைஞரை அறிவாலயத்தின் உள்ளே வராமல் தடுத்து இடையூறு செய்ய வேண்டுமென்பது மாறனின் திட்டம். சரி சன்மியூசிக் சேனலில் காம்பியரிங் பணிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

அறிவிப்பு வந்த தினத்தன்று கிட்டத்தட்ட 3000 இளைஞர்கள் விண்ணப்பங்களோடு அறிவாலயத்தில் குவிந்து விட்டனர். எங்கு பார்த்தாலும் டூ வீலர்கள். விடுமுறை நாள் ஆதலால், கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அறிவாலயத்திற்கு எதிரே ட்ராபிக் ஜாம் ஆகி விட்டது. வண்டி நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. கலைஞரின் உதவியாளர் திருமண விழாவாதலால் பல முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் இடத்தை நிரப்பி விட்டன.

சரியாக கலைஞர் அறிவாலயத்திற்கு நுழையும் போது பெரும் சிக்கல் ஏற்பட்டது. விண்ணப்பங்கள் கொடுக்க வந்தவர்கள் வண்டி செல்லும் பாதையை அடைத்துக் கொண்டும், டூ வீலர்களும் இருந்ததால் கலைஞரின் கார் சிறிது நேரம் நின்று விட்டது. பிறகு போலீசார் தடியடி செய்து அனைவரையும் கலைத்தனர். பாவம் அப்பாவி இளைஞர்கள் அடிவாங்கிக் கொண்டு சென்றனர். நம்மில் யாரையும் இந்தப் பணிக்கு கூப்பிடப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியுமா என்ன?

கலைஞரின் இடத்திலேயே இருந்து கொண்டு அவரையே எதிர்த்துக் கொண்டு தன் நிறுவனத்தை கலாநிதி மாறன் தைரியமாக நடத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட இவ்வளவு தைரியமாக செய்ய மாட்டார்கள்.


இதற்கிடையே சன்டிவி செய்திகள் கலைஞர் டிவியினால் மாறிக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்து கடுப்பான கலைஞர் சன்டிவி உயரதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு 'நாங்கெல்லாம் சிற்றரசர்கள் நீங்கள் பேரரசர்கள் எதற்காக எங்களைப் பார்த்து பயப்படுகிறீர்கள்' என்று கோபமாக கேட்டிருக்கிறார்.

இதற்கிடையே மக்கள் டிவியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். 'எங்கள் தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் செய்திகள் இடம்பெறும். நேரத்தை மாற்ற மாட்டோம். மக்கள் செய்திகளைப் பாருங்கள்' என்று. (நக்கல்)


சன் டிவியின் அலுவலகம் இடம் மாறப்போகிறது என்று பல மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இதுவரை எந்தவித அறிகுறியும் தென்படவில்லையே என்று கேட்பவர்களுக்கு இந்த நியூஸ். சன்டிவியின் ஒரு பகுதி அலுவலகம் காலி செய்யப்பட்டு விட்டது. மற்ற பகுதிகளில காலி செய்யும் வேலைகளும் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டு விட்டன. மந்தவெளியில் உள்ள ஒரு ஓட்டல் லீசுக்கு எடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் அங்கு செயல்படும். பிற்பாடு பெருங்குடியில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்படும்.


டெயில் பீஸ்: அறிவாலயத்தின் முகப்பில் சன்டிவி,
கலைஞர் டிவி விளம்பரப்பலகை அருகருகே இடம் பெற்றிருந்தது.
தற்போது சன்டிவி விளம்பரப் பலகை மிஸ்ஸிங்.

Jan 30, 2008

தமிழ் காமிக்ஸ் - ஒரு நல்ல முயற்சி



தற்போது தமிழில் காமிக்ஸ் புத்தகங்கள் பெருமளவில் வருவது கிடையாது. 1970,80 களில்
நிறைய தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வந்தன. இதற்கென்று தனியாக வாசகர் வட்டம் இருந்தது.
ஆனால் காலப்போக்கில் காமிக்ஸ் புத்தகங்கள் காணாமல் போயின.அந்தக் குறையை
நிவர்த்தி செய்திருக்கிறார் திரு.ராகுலன். அவர்கள். இவர் ஸ்டார் காமிக்ஸ் என்ற பெயரில் தற்போது தமிழில் காமிக்ஸ் புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறார். அதைப் பற்றின செய்தி ஜெயா டிவியில் ஒளிபரப்பானது.

Jan 22, 2008

டாக்டர் அப்துல் கலாம் - வாழ்க்கை வரலாறு குறுந்தகடு வெளியீடு



அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றின குறுந்தகடு விழா நேற்று (21.01.08) அன்று
சென்னை நாரதகான சபா விழாவில் நடைபெற்றது. A Little Dream என பெயரிடப்பட்டுள்ள
இந்த குறுந்தகட்டை தனபால் என்பவர் இயக்கியுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த மின்வெளி மீடியா எனும் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. விற்பனையாகும் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்த குறுந்தகட்டின் தொகை சிறகு எனும் தொண்டு அமைப்பிற்குச் செல்லும்.

Jan 18, 2008

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - சன்டிவி - 18.01.08


சென்னைப் புத்தகக்கண்காட்சி நிறைவு நாளைப் பற்றிய சிறப்புச் செய்தி
சன் டிவியில் ஒளிபரப்பானது.

Jan 13, 2008

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - ஜெயா ப்ளஸ்-13.01.08


சென்னைப் புத்தகக்கண்காட்சியில் சிறுவர் நூல்கள் - பற்றிய தலைப்பில்
சிறப்பு நிகழ்ச்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

Jan 8, 2008

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 - சன்நியூஸ் - 08.01.08


சென்னை புத்தகக் கண்காட்சி 2008 பற்றிய செய்தி சன்நியூஸ் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பானது.